
பகாங், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள பல ஆறுகள் இன்னும் அபாய கட்டத்தில் இருப்பதால் அம்மாநிலங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பகாங்கில், பெராவில் உள்ள பாடாங் கூடாங் பாலம், ஜெராண்டுட்டில் உள்ள பாயா ஜின்டாங் நிலையம் மற்றும் தெமர்லோவில் உள்ள சுங்கை பகாங், கோலா குராவ் ஆகிய இடங்களில் உள்ள சுங்கை செர்த்திங் ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான அளவில் இருப்பதோடு நீர் மட்டமும் உயர்ந்து வருவதாக நீர்பாசன மற்றும் வடிகால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



