
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக 1,300 பேர் காணாமல் போகிறார்கள் என்று உள்துறை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், 2021ஆம் ஆண்டு முதல் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர் என்பதற்கான விவரங்களை விளக்கினார்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க SG Alert போன்ற அமைப்புகளை பயன்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
👉 ஒவ்வொரு வழக்கிலும் நபரை கண்டுபிடிக்க எடுக்கப்படும் நேரம் மாறுபடும்
👉 அதனை காவல்துறை தனியாக கண்காணிப்பதில்லை
என்று தெரிவித்தார்.
இந்த தகவல், பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.



