
நாட்டில் உள்ள 10,500 ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சனை விரைந்து தீர்வு காணப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒப்பந்த மருத்துவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு அவர்கள் நிரந்தர வேலையில் அமர்த்தப்பட வேண்டும் என்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கைக்கு நானும் உடன்படுகிறேன். அந்த வகையில் 4,186 ஒப்பந்த மருத்துவர்கள் அடுத்த ஆண்டு நிரந்தர மருத்துவர்களாக பணியில் அமர்த்தப்படுவர். மேலும் 3,586 மருத்துவ அதிகாரிகள், 300 மருந்தக அதிகாரிகள் மற்றும் 300 பல் மருத்துவ அதிகாரிகள் இதில் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
