
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் வெறும் 59 நாட்களுக்கு மட்டுமே நடைபெறுவது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் சாடினார். அடுத்த ஆண்டு ஐந்தாம் தவணைக்கான மக்களவை கூட்டம் அட்டவணையில் 59 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஆண்டுகளுக்கு 135 நாட்களில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில் உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தும் மோசமான நாடுகளில் மலேசிய இருப்பதாக அவர் சாடினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீண்ட நாட்கள் நடத்துவது அரசாங்கம் தைரியம் கொண்டிருக்கவில்லை என்று அவர் சொன்னார்.
