
நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலில் சபா வாரிசான் கட்சி தீபகற்ப மலேசியாவில் போட்டியிடும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் இன்று அறிவித்தார். அனைவருக்கும் நான் பிரதமர் என்ற அடிப்படையில் பாரிசான் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிடும். அடுத்த ஆண்டு வரை நாம் காத்திருக்க முடியாது. ஆகவே இப்போதே தீபகற்ப மலேசியாவில் வாரிசான் கட்சி கால் பாதிக்கும் வாரிசான் கட்சி அனைத்து இன மக்களுக்கு போராடும் என்று அவர் சொன்னார். இதற்கு முன்னர் சபாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த வாரிசான் இனிமேல் தீபகற்ப மலேசியாவில் எல்லா இடங்களிலும் ஊடுருவும் என்றார். .
