
சிறு வணிகர்களுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் அரசு அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கவுள்ளது. இம்மாதத்துடன் முடிவுக்கு வரவேண்டய இத்திட்டம் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வணிகர்களின் நலன் கருதி மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். மாநில அரசின் இந்த முடிவு வணிகர்களுக்கு ஓரளவு மன நிம்மதியை அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
