
சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தில் டீசல் எண்ணெய் கலந்ததால் 463 பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டது. ஆனால் இப்போது பாதிப்புக்குள்ளான 463 பகுதிகளில் முன்கூட்டியே நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி உள்ளது.. நேற்றிரவு அனைத்து பகுதிகளில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது. நீர் விநியோகம் தொடர்பில் விளக்கம் பெற விரும்புவோர் ஆயர் சிலாங்கூர் அகப்பக்கம் அல்லது 15300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
