
செமினி ஆற்றில் டீசல் வாடை எழுந்ததைத் தொடர்ந்து 463 இடங்களுக்கு நேற்று குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இங்கு ஏற்பட்ட கசிவு சுத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது எல்லா இடங்களுக்கும் நீர் வினியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சிமினி ஆற்றில் டீசல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த இயந்திர தொழிற்சாலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
