
2021-ம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப்போட்டி போர்டோ ரிகோ நாட்டில் நடைபெறவிருந்தது. பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்திய அழகி உட்பட 17 பேருக்கு நோய்த்தொற்று கண்டதால் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் திடீரென்று அறிவித்தனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ள இந்திய அழகி மானசா வாரணாசி உள்பட 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
