
மித்ரா நிதியை பொய்யான கணக்கு காட்டி பெற்றதாக டத்தோ பட்டத்தைக் கொண்ட மேலுமொருவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மலேசிய இந்திய சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. QCDMS Eraminda Consultants என்ற நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ B. Reghu என்பவர், பொய்யான விபரங்களைக் காட்டி, 6 லட்சத்து 25ஆயிரத்து 625 வெள்ளியயைப் பெற்றதாக 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். சமுதாய மேம்பாட்டுக்காக அரசு சார்பில் உருவாக்கப்பட்ட பொது நிதியை, இப்படி தனிப்பட்டவர்கள் அபகரிக்க நினைத்தால், நலிந்த மக்களின் மேம்பாடு என்பது கானல் நீராகிவிடும்.
