24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

உலகில் 30 லட்ச மரணங்களுக்கு கூடுதல் உப்பு சேர்த்துக் கொள்வதே காரணம்

உலகில் சுமார் ஒரு  கோடியே பத்து லட்ச இறப்புகள் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகின்றது.அதில் 30 லட்சம் பேர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக் கொண்டதாலே என்று சுகாதார ஆய்வுகள் காட்டுவதாக சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். உணவில் அதிகமான உப்பு எடுத்துக் கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கு மட்டும் வழி வகுக்காது.மாறாக புற்றுநோய், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றிற்கும் பிரதான காரணமாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.எனவே, உணவில் குறிப்பாக உப்பு அதிகம் சேர்க்கப்பட்டுள்ள துரித உணவுகளை கூடுமானவரைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் நோர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles