31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பாஸ்–பெர்சத்து பிளவு; அன்வாரின் தலைமையின் அவசியத்தை காட்டுகிறது! – டாக்டர் குணராஜ்!

🔥 Views : 3,574
👁 Reading Now : 35

பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கிடையிலான சமீபத்திய பிளவு, மலேசியாவிற்கு நிலையான மற்றும் வலுவான தலைமையின் அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை மைய தொடக்க நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வர பாஸ் எடுத்துள்ள தீர்மானம், நாட்டின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்கால ஒற்றுமை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கூறினார். 16ஆவது பொதுத் தேர்தலை நோக்கி நாடு நகரும் இந்த நேரத்தில், அரசியல் நிலைத்தன்மை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்றார்.

“அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் சூழலில், மலேசியாவிற்கு தெளிவான திசையையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வழங்கக்கூடிய தலைவர் தேவை. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா மடானி கொள்கையின் கீழ் அரசியல் நிலைத்தன்மையைப் பேணியதுடன், பல்வேறு சீர்திருத்தங்களையும் முன்னெடுத்து வருகிறார்,” என்று அவர் தெரிவித்தார்.

நவம்பர் 2022 முதல் அன்வார் தலைமையிலான நிர்வாகம் வறுமை ஒழிப்பு, நல்லாட்சி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் மலேசியாவின் அனைத்துலக மதிப்பை உயர்த்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அவை நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியுள்ளதாகவும் டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார். அரசியல் பிளவுகள் மற்றும் தலைமைத்துவ நிச்சயமற்ற நிலைகள் தேசிய முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும் என்பதற்கான நினைவூட்டலாக பாஸ்–பெர்சத்து பிரிவு அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles