
சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டது மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதன் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்படடதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் டத்தோ முகமட் Nadia Hussain தெரிவித்தார்.
உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சாகசத்தில் ஈடுபட்ட 19 முதல் 23 வயதுடைய அவர்களுக்கு பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 41 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன.
