
நாட்டில் இன்னமும் 70 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் உடனடியாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்,
பூஸ்டர் தடுப்பூசி என்பது கட்டாயம் இல்லை என்றாலும் அது கோவிட் தொற்று நோயைத் தடுக்கவல்லது. மேலும் அதன் மூலம் உருவாகும் புது விதமான தொற்றுகளை எதிர்கொள்ளக் கூடியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொற்றின் அறிகுறி எதுவும் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரைக் காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமது தொகுதியில் கொர்பான் நிகழ்ச்சி விழாவில் இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
