
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் Ramasamy பி. ராமசாமிக்கு பொதுநலனைக் காக்கும் உரிமை இல்லையென சர்ச்சைக்குரிய மத போதகர் Zakir Naik (ஸாக்கிர் நாய்க்) நீதிமன்ற சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இலங்கை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 12 பேரைக் கைது செய்ததில் தமது தூண்டுதல் இருந்ததாக ராமசாமி குற்றம் சாட்டி களங்கம் விளைவித்தார் என்றும் அவர் கூறினார்.
அது தமக்கும் மன உலைச்சலை எற்படுத்தி தமக்கு பொதுமக்களிடையில் இருந்த நன்மதிப்பைக் கெடுத்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் ராமசாமியும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்தான் என்றும் ஸாக்கிர் நாய்க் குற்றம் சாட்டினார்.
