
தற்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை வானளாவ உயர்ந்து சாதாரண மக்களை வாட்டி எடுத்து வருவதாக பாடாங் செராய் பக்காத்தான் எம்பி Karupaiya Mutusami (கருப்பையா முத்துசாமி) குறிப்பிட்டார்.
இந்நிலையில் சமையல் எண்ணெய்க்கான உதவி நிதியை நிறுத்தி பொதுமக்களின் வயிற்றெரிச்சலை அரசு கிளப்பியுள்ளது.
அரசு மக்களின் நலனை முன்னிறுத்தியே ஆட்சியை நடத்த வேண்டுமென்றும், மக்கள் படும் அவதியைப் போக்கும் வகையில் பிரதமரும் மற்ற அமைச்சர்களும் தகுந்த திட்டங்களைத் தீட்ட வேண்டுமென கருப்பையா கேட்டுக் கொண்டார்.
