
அரசு இலாகாக்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சம்பளத் தகவல் தரவுகள் கடந்த ஈராண்டுகளாகக் களவாடப் பட்டுள்ளதை ஆராய அரசு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டுமென லெம்பா பந்தாய் எம்பி பாஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தியுள்ளார்.
பொதுச் சேவை ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் தகவல்கள் கசிந்து பெரும் பிரச்சினையை உருவாக்கவல்லதாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார்.
அடுத்த மக்களவைக் கூட்டத்தில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அது பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டதோடு இப்பிரச்சினை தீர அரசு விசாரணை ஆணையமே சிறந்த வழி என்றும் பாஹ்மி தெரிவித்தார்.
