
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எம்பிக்கான சம்பளம் வழங்கப்படுகிறதா என ஜெலுத்தோங் எம்பி ஆர் எஸ் என் ராயர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நஜிப்பிற்கு செராஸ் புனர்வாழ்வு மையத்தில் வழங்கப்பட்ட சிறப்புச் சிகிச்சையானது எம்பிக்களுக்கான சலுகையா என அவர் கேள்வி எழுப்பினார்.
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட பலரின் பெற்றோர் இறந்ததற்குக் கூட இறுதிச் சடங்குகளில் அவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாதபோது, த ண்டனை அனுபவிக்கும் நஜிப்பிற்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பனார்.
அது பற்றி எழுத்துப்பூர்வமான கேள்வியை அனுப்பபினால், பதிலளிக்கப்படும் என துணை சபாநாயகர் முகமட் ரஷிட் ஹஸ்னோன் தெரிவித்தார்.
