
செய்தி / படங்கள் : எம்.முருகன்
வருகின்ற 19ஆம் தேதி இரவு 7:00 பிஜே சிபிக் சென்டரில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ள இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு ராஜ் உணவகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவின் ஏற்பாட்டாளர் உமா கந்தன் பேசும்போது, தமிழன் ஏற்பாட்டில் வாழ்நாளில் சாதனை புரிந்த 30 பேருக்கு விருது விருது வழங்கப்பட உள்ளது. இதில் வழக்கறிஞர்கள் காவல் துறை அதிகாரிகள் பத்திரிக்கை நிருபவர்கள் மற்றும் முக்கிய பங்காற்றியவர்களுக்கு இவ்விருது விழா நடைபெறுகிறது.

7 மணியிலிருந்து தொடங்க உள்ளது இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இது சிறப்பான விழாவாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் முக்கியமானவர்கள் அவர்கள் சிறப்பான சேவையை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த விருது வழங்குவது பெருமையாக உள்ளது என்றார். அதுபோல அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
