
கோலாலம்பூர்:
தாய்லாந்தின் மூத்த போலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் மலேசியாவில் இல்லை.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக தாய்லாந்து போலிஸ் உட்பட எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் இதுவரை எங்களுக்கு எந்த விண்ணப்பமும் கிடைக்கவில்லை.
ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையில்,
தாய்லாந்திலிருந்து குற்றவாளிகள் இங்கு நுழைவதை நாங்கள் விரும்பவில்லை.
அவர்கள் இருவரும் இந்த நாட்டில் இல்லாமல் இருக்கலாம்.
இருந்தாலும் கிளந்தான், சுங்கை கோலோக் அருகே எல்லை வாயில்,கு றுக்கு வழிகளில் போலிசார் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இன்று நடைபெற்ற ஓப் செலாமாட் 23 பாராட்டு விழாவில் சந்தித்தபோது அவர் கூறினார்.
