
மலேசியாவில் காப்புறுதி முகவர்களின் 25ஆவது ஆண்டு மாநாடு மே 31 முதல் ஜூன் 1 வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.
கோலாலம்பூரின் பெர்ஜயா டைம் ஸ்கொயர் மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டில், தமிழ் திரைப்பட நடிகரும் சிறப்பு பேச்சாளராக ஞானசம்பந்தன், மலேசியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகிலா, மற்றும் பல பிரபலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மலேசியாவிலேயே மிகச் சிறந்த கருத்தரங்காக இது அமைவது உறுதி என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாடு காப்புறுதி துறையின் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால உத்திகள் குறித்து முக்கியமான பேச்சுகளுக்குத் தளமாக அமையும்.
