
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காசா முனையில் அதிகமான இடங்களை பிடித்து, இஸ்ரேலின் பாதுகாப்பு பகுதியாக்குவோம். இதனால் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளோம் என நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு காசா முனையின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 50 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நசேர் மருத்துவமனைக்கு 14 உடல்களுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஐந்து குழந்தைகள், நான்கு பெண்கள் அடங்குவர். கான் யூனிஸ் அருகில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு 19 இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.