25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

இந்திய சமுகத்தின் ஒற்றுமைக்கான நேரம் இது; இல்லையென்றால் ஒருபோதும் நடக்காது!

மலேசிய இந்திய சமூகம் நீண்ட காலமாக தலைவர்கள் பிரிவினைகளுக்கு அப்பால் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என காத்திருந்தது.

இன்று நான் ஒரு அரசியல்வாதியாகவோ, எந்தக் கட்சியின் உறுப்பினராகவோ அல்ல.

ஆனால் இந்த சமூகத்தின் மகனாக, ஒரு சிறந்த நாளைக்காக தினமும் காலையில் எழுந்திருக்கும் ஒவ்வொரு இந்திய மலேசியருக்கும் ஒரு சகோதரனாகப் பேசுகிறேன்.

என் இதயத்தில் உள்ள உண்மையிலிருந்தும் பேசுகிறேன். நமக்கு நேரம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்திலும் எதிர்க் கட்சியிலும் இந்தியத் தலைவர்கள் இருந்தபோதிலும் மத்திய, மாநில மட்டங்களில் செல்வாக்கு மிக்க பதவிகளை வகித்தாலும் அடிக்கடி குற்றம் சாட்டுவது அற்பமான சண்டைகளில் தொலைந்து போவதாகவும் உள்ளது.

எல்லா இந்தியத் தலைவர்களும் கடைசியாக எப்போது ஒன்றாக அமர்ந்து பிரதமரிடம் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை சமர்ப்பித்தனர் என்று கேட்டாள் அது கேள்விக் குறியாக தான உள்ளது.

செயல்திறன் மிக்க சீற்றத்தை விட ஆக்கபூர்வமான திட்டங்களை நாம் எப்போது கடைசியாக தேர்ந்தெடுத்தோம்?

ஆக கடைசியாக எப்போது தவறு என்று கேட்பதை நிறுத்திவிட்டு ஒரே குரலில், எது சரி என்பதை கேட்க வேண்டும் காலம் வந்து விட்டது.

மேலும் 13வது மலேசியா திட்டத்திற்கு அரசாங்கம் தயாராகி வரும் வேளையில், திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அது குறித்து தாக்கவும் இழிவுபடுத்தவும் சிலர் ஏற்கெனவே தயாராக இருப்பது கண்கூடாக பார்க்க முடிகிறது.

இது 13ஆவது மலேசியத் திட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல. நாம் ஒற்றுமையாக இருக்கிறோமா அல்லது பிளவுபட்டிருக்கிறோமா.

நமக்கு என்ன வேண்டும் என்று தெரிந்த ஒரு சமூகமாகப் பேசுகிறோமா. அல்லது நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியாததால் மீண்டும் புறக்கணிக்கப்படுவோமா என்பது பற்றியது.

ஆக நமக்கு இப்போது கேமராக்களும் அதிக பத்திரிகையாளர் சந்திப்புகள் தேவையில்லை. குறிப்பாக நமக்காக பேச அதிக சமூக ஊடக வீரர்களும் தேவையில்லை.

அதே வேளையில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒரு குடையில் கீழ் இணைய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த 14 நாட்களுக்குள் மலேசிய இந்திய ஒற்றுமை வட்டமேஜை கூட்டத்தை கூட்ட வேண்டும்.

பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய உண்மையான, செயல்படுத்தக்கூடிய கோரிக்கைகளுடன் ஒன்றுபட்ட இந்திய பரிந்துரைகளை வரைவோம்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் நாம் கூட்டாக நமது குரலைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும்.

13ஆவது மலேசியத் திட்டத்திற்கு முன் ஒன்றாக நிற்போம். எனவே நாம் இனி ஓரங்கட்டப்படுவதைப் பற்றிப் பேசவில்லை.

மாறாக ஒற்றுமை, முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுகிறோம்.

இப்போது இதைச் செய்யத் தவறினால், நீண்ட காலத்திற்கு நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

மேலும் நமது சொந்த எதிர்காலத்தில் பார்வையாளர்களாக இருக்க இனி நாம் அனுமதிக்க முடியாது. ஆக நாம் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும்.

குணராஜ் ஜோர்ஜ்
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles