
2022 ஆம் ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படுவதற்குள் 80 விழுக்காட்டு மாணவர்களுக்கு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்திற்குள் 12 முதல் 17 வயது வரையிலான 60 விழுக்காட்டு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்யவிருப்பதாக அவர் கூறினார். “பிக் ரெமாஜா“ எனப்படும் இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் முன்கூட்டியே அதாவது சரவா மாநிலத்தில் செப்டம்பர் 8ஆம் தேதியும் லபுவானில் செப்டம்பர் 11 ஆம் தேதியும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
