
மலேசியர்கள் மாநிலம் கடந்து தங்களது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அரசாங்கம் அனுமதி வழங்கி இருப்பதால் பொதுமக்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பஸ் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மாநிலம் கடக்க முடியாமல் இருந்த மலேசியர்கள் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தற்போது உற்சாகத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
