
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் சிலாங்கூர் அரசின் உணவுக் கூடைத் திட்டத்தின் வழி பலனடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கவும் அவர்களுக்க்கான உணவு விநியோகம் துண்டிக்கப்படுவதை தவிர்க்கவும் இந்த உணவுக் கூடைத் திட்டம் உதவியது என்று அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று பீடித்த இரு இரண்டு ஆண்டு காலத்தில் சிலாங்கூர் அரசாங்கம் நான்கு பொருளாதார மீட்சித் திட்டங்கள் வாயிலாக 110 கோடி வெள்ளிக்கும் மேல் செலவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.



