
வரும் நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கையை பின்பற்றும்படி அனைத்து அரசாங்கம் ஊழியர்களையும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி கேட்டுக் கொண்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த உத்தரவை பின்பற்றாத அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்
