
சிலாங்கூர், கிள்ளானில் சட்டவிரோத கோவிட் தடுப்பூசி விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 3 ஆடவர்களை போலீஸ் கைது செய்துள்ளது இக்கும்பல் உண்மையில் தடுப்பூசியை விற்பனை செய்கிறதா அல்லது போலி மருந்துகளை விற்பனைச் செய்கிறதா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் இவர்கள் விற்பனைச் செய்தப் பொருட்கள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த 3 பேரில் இருவர் டாக்டர்கள். இவர்களின் செயல் உண்மையில் அத்தொழிற்சாலையின் தொழிலளர்களை 2ஆவது கோவிட் தடுப்பூசிச் செலுத்திக் கொள்ள அனுப்பிய போது அவர்கள் முதல் மருந்தளவுத் தடுப்பூசிச் செலுத்தியதற்கானப் பதிவைச் கிள்ளான் மாவட்டச் சுகாதார அலுவலகம் காணவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து அம்பலமானது என்றார் அவர்..
