
வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடும் என்று அதன் தலைவர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார். இதற்கு பெரிகாத்தான் கீழுள்ள பாஸ், கெராக்கான் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். இதில் அம்னோ ஒத்துழைக்க மறுத்தது உண்மையில் எதிர்பார்த்த ஒன்றுதான். இருந்த போதிலும் தேர்தலில் மோதலைத் தவிர்க்க இணைந்து ஒத்துழைப்பதற்கு அம்னோ தயாரா இல்லையா என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
