
போதைப் பொருளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுன் தீமோர் லாவுட் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் உணவு அனுப்பும் சேவையை செய்பவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 62 கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பல்வகை போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். .சுமார் 15 ,770 வெள்ளி மதிப்புள்ள 400 கிராம் ஹெரோயின்,16 .68 கிராம் ஷாபு,0 .67 கிராம் கெத்தாமின் ஆகியவற்றை கைப்பற்றினர். 21 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட 59 ஆண்களுமம 3 பெண்களும் பிடிபட்டதாக பினாங்கு மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் துணை கமிஷினர் முஸ்தபா கமால் கனி அப்துல்லா தெரிவித்தார்.
