
கோலலங்காட்டில் உலகின் மூன்று முன்னணி காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் 400 வெள்ளி முதலீட்டில் காகித தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின ஷாரி கூறினார். இரண்டு சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் முதலீட்டின் வழி சுற்று வட்டார மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சிலாங்கூர் உலக வரைபடத்தில் இடம் பிடிக்கவும் செய்யும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
