
கடந்த 2019ஆம் ஆண்டில் முகநூல் வாயிலாக அவதூறு அறிக்கையை பரப்பியது தொடர்பில் மலாக்கா மாநில மந்திரி பெசாருக்கு எதிராக பொக்கோ செனா நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ மாஃபுஸ் ஒமார் இழப்பீட்டு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். கெடா மந்திரி புசார், டத்தோஸ்ரீ முகமட் சனுசி மாட் நோர் 50,000 வெள்ளியை இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 14 நாட்களில் அந்த இழப்பீட்டுத் தொகையை முகமட் சனுசி மாஃபுஸுக்குச் செலுத்தி விட வேண்டும் என்று கெடா மந்திரி பெசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
