
தீபாவளி முதல் நாளில் நவம்பர் 3ஆம் தேதி இரவு 11 மணி முதல் பின்னிரவு 12 .30 மணி வரை பிரிக்பீல்ட்ஸ் சாலையில் முகக் கவசம் அணியாமல் Sop விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து நடனமாடிய இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு வருவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் அறிவித்துள்ளது. டிராம் அடித்து பட்டாசுகள் வெடித்து இவர்கள் நடமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது இதை போலீசார் மிகக்கடுமையாக கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
