
கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாத அரசு ஊழியர்களில் கல்வியமைச்சை சேர்ந்தவர்களே அதிகம் என நம்பப்படுவதாக பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமது கைருள் அடிப் அப்துல் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். எனினும், தடுப்பூசி பெறாதவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை. இதன் தொடர்பான தரவுகளைத் திரட்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் இரு தினங்களில் அப்பணி முற்றுப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
