26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

சட்டத்தை மீறும் ரோஹிங்கியா அகதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் அன்வார்!

🔥 Views : 2,496
👁 Reading Now : 56

கோலாலம்பூர்: பொது அமைதியையும் போக்குவரத்தையும் பாதிக்கும் வகையில் சட்டத்தை மீறும் ரோஹிங்கியா அகதிகள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நகர்ப்புறங்களில் பெருமளவில் கூடுவதன் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சிரமத்தை விளைவிப்பதாகக் கூறப்படும் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்காக மலேசிய குடிநுழைவுத் துறை, ராயல் மலேசிய போலீஸ் (PDRM) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சட்டத்தை மீறும் அகதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறுகையில், ரோஹிங்கியா அகதிகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையகம் (UNHCR)-இல் பதிவு செய்யப்பட்டவர்களாக இருந்தாலும், மலேசியாவின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிக்க வேண்டியது அவசியம் என்றார்.

“நாம் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சட்டங்களும் விதிகளும் உள்ளன. எந்தவொரு குழுவும் ஒரு நகர்ப்புறப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோ அனுமதிக்கப்படாது,” என்று அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மலேசியாவில் தங்கியிருக்கும் அனைத்து அகதிகளும் நாட்டின் சட்டங்களை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என்றும், பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் கடுமையாக கையாளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles