26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

3ஆர் விவகாரங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம் – ஜாஹித் ஹமிடி!

🔥 Views : 1,753
👁 Reading Now : 40

நெகிரி செம்பிலான்: 16ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, 3ஆர் (இனம், மதம் மற்றும் அரச நிறுவனங்கள்) தொடர்பான விவகாரங்களை எந்த அரசியல் கட்சியும் பெரிதுபடுத்தக் கூடாது என்று துணைப் பிரதமரும் தேசிய முன்னணி (BN) தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலான் அரண்மனை, தேர்தல் பிரச்சாரத்தின் போது 3ஆர் தொடர்பான விவகாரங்களைத் தவிர்க்குமாறு விடுத்துள்ள எச்சரிக்கையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“உண்மையில் தேசிய முன்னணி, 3ஆர் தொடர்பான எந்த விஷயத்தையும் தேர்தல் பிரச்சாரத்தின் தலைப்பாக ஒருபோதும் பயன்படுத்தவில்லை,” என்று ஜாஹித் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் அரச நிறுவனங்களும், ஆட்சியாளர்களின் அமைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தேசிய முன்னணியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

நெகிரி செம்பிலானின் தனித்துவமான ‘நான்கு உந்தாங்’ (Empat Undang) பாரம்பரிய ஆட்சி அமைப்பும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அந்த அமைப்புகளை நாங்கள் ஒருபோதும் அரசியல் விவாதத்திற்குள் இழுத்ததில்லை. மாறாக, அவற்றை எப்போதும் மதித்து வந்துள்ளோம்,” என்று ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் நலன், மாநில வளர்ச்சி மற்றும் கொள்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், இன, மத மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரங்களைத் தவிர்ப்பதே தேர்தல் சூழலை அமைதியாக வைத்திருக்க உதவும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles