
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் அட்லி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தேசிய முன்னணி ஆட்சியில் தஞ்சோங் பிடாராவில் நிலத்திற்காக 30 ஆண்டுகள் மக்கள் காத்திருந்தார்கள். ஆனால் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் 22 மாதங்களில் மக்களுக்கு நிலத்தைக் பெற்றுத் தந்தோம். ஆகவே மலாக்கா மாநில மக்களுக்கு மீண்டும் சிறப்பான ஆட்சியை வழங்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.



