
பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 10 கோடி வெள்ளியில் வீடு, நிலத்தைப் பரிசாக வழங்கும் அமைச்சரவையின் நடவடிக்கையைக் கண்டு எதிர்கட்சி அதிர்ச்சியடைவதாக அதன் தலைவர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது தொடர்பில் நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. அரசுத் தரப்புடன் நடத்தப்படும் எந்த சந்திப்பிலும் இது பற்றி விவாதிக்கவே இல்லை அல்லது எங்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை என்றார். நஜிப்புக்கு 10 கோடி வெள்ளியில் வீடு நிலம் வழங்கப்பட்டால் அரசாங்கத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிசீலிப்போம் என்றார் அவர்.



