
சுகாதார அமைச்சின் மூத்த துணை இயக்குனர் டாக்டர் சாய் கோ மியோ மரணம் தொடர்பில் பொதுமக்கள் ஆருடங்கள் கூறுவதை தவிர்த்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் மரணம் தொடர்பில் சவப் பரிசோதனை அறிக்கை வெளியிடும் வரை யாரும் இந்த ஆருடங்களையும் கூற வேண்டாம். பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அவர் பக்கவிளைவுகளுக்கு ஆளானார் என்ற எந்த ஒரு தகவலும் இல்லை என்று அவர் சொன்னார்.
