
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு 10 கோடி வெள்ளியில் வீடு மற்றும் நிலத்தை வெகுமதி யாக வழங்குவது ஏற்புடையது அல்ல என்று அமானா கட்சியின் தேசிய தலைவர் முகமட் சாபு குறிப்பிட்டார். ஆகவே மலாக்கா மாநில மக்கள் நாளை நடைபெறும் தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனலை புறக்கணிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். அட்லி தலைமையில் மீண்டும் மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கும் பாடி அவர் கேட்டுக் கொண்டார்.
