
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று நள்ளிரவுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று கடைசி நாளில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் 28 வேட்பாளர்களை ஆதரித்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட அனைத்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இன்று 28 வாக்களிப்பு நடைபெறுகிறது.

மாலை 6.00 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்படும். இன்று நடக்கும் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் நம்பிக்கை தெரிவித்தார்
