
கடந்த ஈராண்டுகளாக அனைத்து துறைகளுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்திய கோவிட்-19 நோய்த் தொற்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை வரைவதில் சிலாங்கூர் அரசுக்கு கூடுதல் அனுகூலத்தை வழங்கியுள்ளது. வரும் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் அந்த வரவு செலவுத் திட்டம் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான கவசங்களைக் கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
