27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வாகனமோட்டும் லைசென்ஸ் விற்பனையா? ஜே.பி.ஜே. தீவிர விசாரணை

வாகனமோட்டும் லைசென்ஸ் விற்பனை குறித்து சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்றவரான அஸ்ருள் அப்பாண்டி என்பவர் வெளியிட்ட பதிவு தொடர்பில் சாலை போக்குவரத்து இலாகா ஜே.பி.ஜே. ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து தீவிர விசாரணையை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. இப்புகாரை தமது தரப்பு மிகக் கடுமையாக கருதுவதோடு விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட நபரை தமது தரப்பு அழைக்கும் என்று ஜே பி.ஜே. அறிக்கை ஒன்றில் கூறியது. ஜே பி.ஜே. சம்பந்தப்பட்ட எந்தவொரு முறைகேடான விவகாரத்திலும் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அது திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles