
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற கூடிய தொகுதிகள் கெஅடிலான் கட்சிக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் கிடைத்த தொகுதிகளில் கெஅடிலான் போட்டியிடும். காரணம் போட்டியிடவில்லை என்றால் அங்கு ஜிபிஎஸ் கட்சி போட்டியின்றி வெற்றி பெறும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை கேட்பதால் கெஅடிலான் பேராசை கொள்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் போட்டியிட வேண்டிய நிலையில் கெஅடிலான் உள்ளது என்று அவர் சொன்னார்.
