
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை நாட்டில் 21,316 மாணவர்கள் கல்வியை நிறுத்தி கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் எழுத்துப் பூர்வமாக வழங்கிய பதிலில் இந்த இன்னிக்கு இடம்பெற்றிருக்கிறது. 21, 316 மாணவர்கள் கல்வி நிறுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். மலேசியாவில் என்னதான் நடக்கிறது என்பது பெரும் வேதனையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
