
1955 ஆம் ஆண்டு வேலை திருத்த சட்டத்தில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தேசிய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெ. சோலமன் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வேலை சட்ட திருத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களின் கருத்துக்களையும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டறிய வேண்டும். திருத்தங்களின் சேர்க்கப்பட வேண்டிய ஆலோசனைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் நியாயமான தீர்வை கொடுக்கக்கூடிய வகையில் சட்டங்கள் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று சோலமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
