
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நாட்டிலுள்ள இந்திய தொழில் துறைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருப்பதாக மைக்கி எனப்படும் மலேசியா இந்தியா தொழிலியல் சங்கத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். உலோக பொருட்கள் மறுசுழற்சி கடைகள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், முடித்திருத்தும் கடைகள், தையல் கடைகள், இந்திய உணவகங்கள் உட்பட அனைத்து இந்தியர் தொழில் துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
