
எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் . நிறுவத்தின் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீண்டும் பிரதமராகுவதற்கு சாத்தியம் உண்டு என்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மறுக்கவில்லை. இதில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எடுத்துக் கொண்டால் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பே அவர் சிறை வைக்கப்பட்டார். ஆனால் நஜிப் குற்றஞ்சாட்டப்பட்டு விட்ட போதிலும் குற்றம் புரியாதவர் போலத்தான் கவனிக்கப்படுகிறார். அவர் வெளிநாடுகள் உட்பட எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்று வருகிறார் என்று அவர் சொன்னார்.
