
மாணவர்களிடையே கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டப் போதிலும் நேருக்கு நேர் கற்றல்-கற்பித்தல் பள்ளித் தவணையை இவ்வார இறுதி வரை கல்வி அமைச்சு தொடரும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ரட்சி ஜிடின் தெரிவித்தார். தற்போதைய கால கட்டத்தில் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தொற்றுக் கண்டவர்களின் விகிதம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. இப்போது இருக்கும் ஒட்டுமொத்த 45 லட்சம் மாணவர்களைக் காட்டிலும் தொற்றுக் கண்டவர்களின் எண்ணிக்கை 200 பேருக்கும் மேல் என்று கடந்த சனிக்கிழமைப் பதிவுச் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
