
மலேசியக் குடும்ப அமைச்சரவையின் 100 நாள் அடைவுநிலை தோல்வியில் முடிந்து விட்டது என்று பெஜுவாங் கருதுவதாக அதன் தலைவர், டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர் தெரிவித்தார். அவர்களின் அடைவுநிலை தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி மலேசியக் குடும்ப அடைவு நிலைக்கு ஏற்ப எப் கிரேட் தான் நான் கொடுப்பேன். இவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப் பெரிய ஒதுக்கீட்டுத் தொகை வழங்கப்பட்டப் போதிலும் ஒவ்வொரு திட்ட அமலாக்கமும் மக்களுக்கு ஒன்றும் பெரிய நன்மைகளை அளித்து விடவில்லை. அதனால் அவர்களுக்கு நான் எப் கிரேட் கொடுத்தேன் என்று அவர் சொன்னார்.
